• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை – ஜெயக்குமார்

October 3, 2017 தண்டோரா குழு

சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல்நலக் குறைவை காரணம் காட்டி 15 நாட்கள் விடுவிக்க வேண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டி.டி.வி.தினகரன் மீது சட்டத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய அரசு பெரும்பான்மையுடன் இருப்பதாகவும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் தி.மு.கவுக்குள் ஸ்டாலினுக்கு இருக்கின்ற பெரும்பான்மை குறைந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
மேலும், சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க