• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி படம் பார்த்தபடியே பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

October 3, 2017 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பாகுபலி படம் பார்த்தபடியே அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிபவர் வினயகுமாரி. இவருக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப்பார்த்ததில் தலையில் அவருக்கு ரத்தம் உறைந்திருப்பது தெரியவந்தது. இதனால் அறுவைசிகிச்சை மூலம் ரத்த உறைவை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

எனினும், அறுவை சிகிச்சை நடக்கும்போது வினயகுமாரி தூங்கக் கூடாது என்பதால் அவருக்கு பாகுபலி படம் திரையிட்டு காட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்கான சிறப்பு ஏற்பாட்டை மருத்துவமனை நிர்வாகம் செய்தது.

இதனையடுத்து திரையில் பாகுபலி படம் ஓடத் தொடங்கியதும் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

மேலும் படிக்க