• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கியூபா தூதரகத்தில் பணிபுரியும் 60 சதவீத ஊழியர்களை குறைக்க அமெரிக்கா முடிவு

October 3, 2017 தண்டோரா குழு

வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 6௦ சதவீத ஊழியர்களை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கியூபா நாட்டின் தூதரகம் அமைந்து உள்ளது. பல ஆண்டுகளாகவே அமெரிக்கவிற்கும் கியூபா நாட்டிற்கும் இடையே பகை இருந்தது வந்தது. ஆனால், சமீபத்தில்தான் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 21 அமெரிக்க ஊழியர்கள் எதிர்பாராத விதமாக காது, கண் பார்வை, இருதயம் மற்றும் மூளை உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களின் 6௦ சதவீத ஊழியர்களை குறைத்தது.

இதனையடுத்து, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருக்கும் கியூபா தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 6௦ சதவீத ஊழியர்களை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கியூபா நாட்டை தண்டிக்கும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இரு நாடுகளின் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க