October 3, 2017
தண்டோரா குழு
மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, தி.மு.க நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழக அரசுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக தி.மு.க சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
செப்டம்பர் 18ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இன்னும் இந்த இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.