• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மாற்றுதிறனாளிக்கு ஏற்பட்ட அவமானம்

October 3, 2017 தண்டோரா குழு

அசாமில் திரையரங்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, மாற்றுதிறனாளி எழுந்து நிற்கவில்லை என்பதால், அவரை அங்கிருந்த சிலர் அவமானப்படுத்தி உள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் அர்மான் அலி என்பவர் வசித்து வருகிறார். அவர் ஒரு மாற்றுதிறனாளி. திரைப்படம் பார்க்க அவர் திரையரங்கிற்கு சென்றிருந்தார்.திரைப்படம் தொடங்குவதற்கு முன், இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.ஆனால் அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தவர்கள், அவர் மாற்று திறனாளி என்று அறியாமல், ‘பாகிஸ்தானி’ என்று அழைத்து அவரை அவமானப்படுத்தினர்.

இது குறித்து அர்மான் கூறுகையில், “திரையரங்கில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, நான் நேராக அமர்ந்த வண்ணம் தேசிய கீதத்தை பாடிக்கொண்டிருந்தேன். நான் எழுந்து நிற்காமல், வேண்டும் என்றே அமர்ந்து இருக்கிறேன் என்று எனக்கு பின்னல் நின்றுகொண்டிருந்தவர்கள், நம் மத்தியில் ஒரு பாகிஸ்தானி அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்று கூறி என்னை அவமானப்படுத்தினர்.

மேலும்,இச்சம்பவம் குறித்தும், என்னை போன்றவர்கள் சந்திக்கும் அவமானங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பபோகிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க