• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடனை அடைக்க பிறந்த குழந்தையை விற்ற தந்தை கைது

October 2, 2017 தண்டோரா குழு

மும்பையில் வாங்கிய கடனை திருப்பி தருவதற்காக, தன்னுடைய குழந்தையை விற்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்தவர் முன்னா ஷேக்(38) மற்றும் அவருடைய மனைவி ஷாசியா(35). ஷாஷியாவிற்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது. இது குறித்து கணவன் மனைவி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முதலில் அந்த குழந்தையின் பெற்றோரை அவர்கள் விசாரித்தனர். அந்த விசாரணையின் போது, அந்த குழந்தையின் தந்தை முன்னுக்கு முரணாக பதிலளிப்பதை கண்ட காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவரை தீவிரமாக விசாரித்தனர். தான் வாங்கிய 1 லட்சம் கடனை திருப்பி தருவதற்காக, தன்னுடைய ஆண் குழந்தையை 2௦,௦௦௦ ரூபாய்க்கு ஜூலியா பெர்னான்டெஸ் என்பரிடம் விற்றதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஜூலியா பெர்னான்டெசை குழந்தை கடத்தல் குற்றத்தின் கீழ் கைது செய்து, அந்த குழந்தையை பத்திரமாக காவல்துறையினர் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஷேக்கிடம் இருந்து அவருடைய ஆண் குழந்தையை வாங்கியதையும், குழந்தை இல்லாத தம்பதியினரிடம் அந்த குழந்தையை 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டு இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, முன்னா ஷேக் மற்றும் ஜூலியா பெர்னாண்டஸ் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க