• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஐடி உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில் எலி

September 28, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் ஐஐடி கல்வி நிறுவனத்தில் உள்ள உணவு விடுதியில் காலை உணவில் இறந்த எலி இருந்த சம்பவம் மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

புதுதில்லியின் ஐஐடி கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்திலுள்ள ஆண்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், காலை உணவிற்கு அங்கிருக்கும் உணவு விடுதியில் உணவருந்த வந்தனர். அப்போது, மாணவர்களுக்கு வழங்கிய தேங்காய் சட்டினியில், இறந்த எலி ஒன்று இருப்பதை ஒரு மாணவர் கவனித்துள்ளார். உடனே உணவு விடுதி மேலாளரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து குறித்து ஐஐடி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் கூறுகையில்,

“இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாருடைய கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்தது என்று கண்டுபிடித்து, அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்”.என்று கூறினார்.

மேலும் படிக்க