• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம்

September 26, 2017 தண்டோரா குழு

சிங்காநல்லூர் பகுதியில் 24 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதைக் கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அண்மையில் பெய்த கனமழையால் குளம், குட்டைகள் ஆகியவை நிரம்பியும் கூட கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் தொகுதிக்கு 24 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டினர்.

மேலும் இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஆணையருக்கு மனுகொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.இதினிடையே கோவை மாநகராட்சியின் இந்த போக்கை கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2௦௦க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க