• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம்

September 25, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் அவர் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 5-ம் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் குற்றசாட்டு கூறினர். இந்நிலையில் அணிகளும் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க