• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் இறக்கை உடைந்து விழுந்தது!

September 25, 2017 தண்டோரா குழு

ஜப்பானின் ஒசாகா நகரின் மீது பறந்துக்கொண்டிருந்த கேஎல்எம் விமானத்தின் இறக்கை பகுதி உடைந்து விழுந்ததில், கார் முழுவதும் சேதம் அடைந்தது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த கேஎல்எம் ராயல் டட்ச் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ஆம்ஸ் டர்டாமுக்கு செல்ல, அமெரிக்காவின் கன்சாஸ் சர்வதேச விமானநிலையத்திலிருந்து, சுமார் 3௦௦ பயணிகளுடன் புறப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரின் மேல் பறந்துக்கொண்டிருந்தபோது, 4 கிலோ எடையுடைய இறக்கையின் ஒரு பகுதி, உடைந்து சுமார் 2௦௦௦ மீட்டர் உயரத்திலிருந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தது. காரின் மீது விழுந்த வேகத்தில், அதன் கூரை நொறுங்கி, அதன் கண்ணாடிகள் சிதறின. கார் முழுவதும் சேதம் அடைந்தது.

இறக்கை உடைந்த சேதம் அடைந்த அந்த விமானமும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க