• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டாசு வாங்கவும் ஆதார், பான் எண் தேவை

September 25, 2017 தண்டோரா குழு

குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அனைத்து வித பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி, பின் அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனினும் விற்பனையாளர்கள் அல்லாமல் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக குடோன்களுக்கு நேரடியாக செல்கின்றனர்.

இதையடுத்து அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இல்லாத காரணங்களால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க