• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீடித்தது தமிழக அரசு

September 23, 2017 தண்டோரா குழு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்
ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இதையடுத்து பேரறிவாளனின் பரோலை நீடிக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேரறிவாளன் பரோல் நீடிக்கப்பட்டதற்கான நகல் மத்திய புழல் சிறை தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அக்டோபர் 24-ம் தேதி வரை பரோல் வழக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் மற்றும் அவரது பெற்றோரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க