• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் பட விளம்பரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

September 22, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி உலக அளவில் சாதனை படைத்தது. இதற்கிடையில், தயாரிப்பளர் ராஜேந்திரன் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2014ம் ஆண்டே மெர்சலாயிட்டேன் என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். இப்படத்தை புதுமுக இயக்குனர் புதுமுக நடிகரை வைத்து இயக்கி வருகிறார். மேலும் தலைப்பை புதுப்பிக்கும் பணியையும் செய்து வருகிறேன். ஆகையால் விஜயின் மெர்சல் படத்தை விளம்பரம் செய்வது தவறானது எனக் குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும் படக்குழு சார்பில் அதிக அளவு பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தை விளம்பரப்படுத்த தடை விதிக்கக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி அக்டோபர் 3ம் தேதி வரை படத்தை விளம்பரபடுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், அன்றைய தினத்திற்கே வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்க