தேவையான பொருட்கள்:
இறால் – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்துமல்லி – அலங்கரிக்க
கடுகு – தாளிக்க
செய்முறை:
முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும். தண்ணீர் சேர்த்து இறாலை 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான இறால் மிளகுத் தொக்கு தயார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா