• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப்ளூ வேல் விளையாட்டிலிருந்து காப்பாற்ற விடைத்தாளில் பள்ளி மாணவன் கோரிக்கை

September 22, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் காலாண்டு தேர்வின் போது, ப்ளூ வேல் விளையாட்டில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என விடைத்தாளில் பள்ளி மாணவன் ஆசிரியருக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், தான் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடி வருவதாகவும், அந்த விளையாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி கட்டத்தை செய்ய தன்னை வற்புறுத்துகின்றனர் என்றும் இதனால் என்னை காப்பாற்றுங்கள் என்று சமஸ்கிருத தேர்வின் போது விடைத்தாளில் எழுதியுள்ளான்.

இதனை படித்த ஆசிரியர் இதுக்குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தந்தார். இதனை அடுத்து பள்ளி அதிகாரிகள், உடனே வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் தந்தனர். அவர் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த விளையாட்டின் மூலம், பல இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த விளையாட்டை இணையதளத்தில் இருந்து எடுக்க வேண்டுமென்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க