• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

September 22, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெறுவதாக தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.சபாநாயகர் தனபால் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக தொடப்பட்ட வழக்கில் சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யமறுக்கப்பட்டது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.இம்மனுவில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க