• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்ற வருடம் இதே நாளில் ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி

September 21, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா கடந்த ஆண்டு இதேநாளில் தான், சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவர் இறுதியாக கடந்த ஆண்டு இதே நாளில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஜெயலலிதாவை பொதுமக்களால் பார்க்க முடியாமல் போனது.

ஏனெனில், ரயில் சேவையைத் தொடங்கி வைத்த, மறுநாளே உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

இறுதியாக அந்நிகழ்ச்சியில் ஜெயலிலதா பேசும்போது,

சென்னையை அதிநவீன வசதிகள் கொண்ட பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவு நனவாகி வருவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் சேவையின் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது கட்ட பணிகளுக்கும் ஜப்பான் நிறுவனம் ஆதரவு அளிக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

மேலும், மெட்ரோ ரயில் சேவையைப் போன்று, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் சுற்று வட்டப்பாதை திட்டம், முதலீட்டு வளர்ச்சி ஆகிய திட்டங்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

மேலும் படிக்க