• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டின் உயரிய விருதுக்கு தோனி பெயர் பரிந்துரை

September 20, 2017 தண்டோரா குழு

நாட்டின் 3-வது உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

டி20, 50 ஓவர் உலககோப்பை, சாம்பியன் டிராபி என அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இதுவரை தோனி 302 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9737 ரன்கள் குவித்துள்ளார். அதில் 10 சதம், 66 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4876 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 சதங்கள், 33 அரைசதங்கள் குவித்துள்ளார். 78 டி20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று 1212 ரன்களை குவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பல சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுத்தந்தமையை கவுரவிக்கும் வகையில் பத்மபூஷன் விருதுக்காக மகேந்திர சிங் தோனி பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 36 வயதாகும் தோனி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க