• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெக்ஸிகோ நகரில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

September 20, 2017 தண்டோரா குழு

மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 140க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் நேற்று(செப்டம்பர் 19) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1ஆக பதிவாகியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் நேரத்தின் படி, இந்த பூகம்பம் மதிய உணவு வேளையின்போது ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், அலுவலகங்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் 49 கட்டடங்கள் தரைமட்டம் ஆனது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.இடிப்பட்ட கட்டடங்களில் இடைப்பாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கடந்த 1985ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1௦,௦௦௦ பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் நினைவு நாளின் போது, மீண்டும் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மெக்ஸிகோ நாட்டின் மக்களுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளனர்.

“மெக்ஸிகோ மக்களுக்கு உதவ ஐநா உதவ தயாராக இருக்கிறது” என்று ஐநாவின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“உலக நாடுகள் மெக்ஸிகோவிற்கு உதவி செய்ய முன் வந்ததற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்” என்று மெக்ஸிகோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

மேலும் படிக்க