• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்ஸிகோ நகரில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

September 20, 2017 தண்டோரா குழு

மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 140க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் நேற்று(செப்டம்பர் 19) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1ஆக பதிவாகியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டின் நேரத்தின் படி, இந்த பூகம்பம் மதிய உணவு வேளையின்போது ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், அலுவலகங்கள், வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் 49 கட்டடங்கள் தரைமட்டம் ஆனது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.இடிப்பட்ட கட்டடங்களில் இடைப்பாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கடந்த 1985ம் ஆண்டு மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1௦,௦௦௦ பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் நினைவு நாளின் போது, மீண்டும் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மெக்ஸிகோ நாட்டின் மக்களுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளனர்.

“மெக்ஸிகோ மக்களுக்கு உதவ ஐநா உதவ தயாராக இருக்கிறது” என்று ஐநாவின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“உலக நாடுகள் மெக்ஸிகோவிற்கு உதவி செய்ய முன் வந்ததற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்” என்று மெக்ஸிகோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

மேலும் படிக்க