• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் சிறையில் இருந்து விடுதலை

September 20, 2017 தண்டோரா குழு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மே 17 இயக்க ஓருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 21ந் தேதியன்று சென்னை மெரினாவில் இலங்கை தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருடன் டைசன், இளமாறன், அருண் என மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதைதொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தும் இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார், இளமாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க