• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் சிறையில் இருந்து விடுதலை

September 20, 2017 தண்டோரா குழு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மே 17 இயக்க ஓருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 21ந் தேதியன்று சென்னை மெரினாவில் இலங்கை தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருடன் டைசன், இளமாறன், அருண் என மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதைதொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தும் இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார், இளமாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க