தேவையான பொருள்கள்:
ஆப்பிள் – 2
சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி
நெய் – 5 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு – 1கப்
முந்திரிப் பருப்பு – 10
கேசரிப் கலர் – 1/2 சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும். நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், கேசரிப் கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து ஏலக்காய் தூள் தூவி அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்