• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

September 16, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை வெற்றிகரமாக முடித்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதுக்குறித்து கோவை அரசு மருத்தவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“சிலருக்கு குழந்தை பருவத்திலேயே மூட்டுகள் வீங்கி காய்ச்சல் ஏற்படும், இதனால் இருதயத்திற்கு செல்லும் ரத்த நாணங்கள்(வால்வு) பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் ஏற்படும். இப்படிப்பட்ட சிரமங்களுடன் இருந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது, அரசு மருத்துவமனையில் அரசு காப்பீட்டு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இது போன்ற நவீன அறுவை சிகிச்சைகளை வரும் காலங்களில் மேற்கொள்வார்கள்.” என்றார்.

தேவராஜ் வயது 13, கனகராஜ் வயது 27 இவர்களுக்கு தான் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க