• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 10331 பேர் பல்தொழில்நுட்ப கல்லூரிஆசிரியர்களுக்கான தேர்வு எழுதினர்

September 16, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றது.

அதன்படி, இன்று அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கோவை மாவட்டத்தில் 38 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வில் 13,849 நபர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,518 நபர்கள் தேர்வெழுதவில்லை. இத்தேர்வினை கண்கானித்திட 38 முதன்மை கண்கானிப்பாளர்களும், 38 கூடுதல் கண்கானிப்பாளர்களும், 9 பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர்களும் பணியாற்றினர்.

“இத்தேர்விற்கான ஏற்படுகள் முன்னரே அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்டத்தில் அனைத்து மையங்களிலும் சிறப்பாக தேர்வுகள் நடைபெற்றது” என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தேர்வு கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மேலும் படிக்க