• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி அருகே குழந்தைகளுடன் தாய் தற்கொலை

September 16, 2017 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்தவர் ராஜேஸ்.இவர் பனியன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் பவின் பவேஷ் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வித்யா குந்தைகளுடன் வீட்டில் இருந்த போது நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்த போது வித்யா தூக்கில் தொங்கியபடியும் குழந்தைகள் இருவரும் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மூவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்ற போது குழந்தைகளும் வித்யாவும் இறந்து விட்டனர்.குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு வித்யாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன்பு வித்யா கணவர் ராஜேஸ்க்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் “நான் எத்தனை முறை தனிக்குடித்தனம் செல்லலாம் என அழைத்தும் வரவில்லை.இப்ப நாங்க போறோம் நீ மட்டும் தனியாக இருக்க போறீயா குழந்தைகளை தனியாக விட்டு போக முடியல அதனால தான் கூட்டிட்டு போறேன். நீ என்னை உண்மையாக காதலிக்கவில்லை அதனாலதான் என் பேச்சை கேட்டகல இனி நீ சந்தோஷமாக இரு எங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்க எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல்நிலைய போலீசார் கடிதத்தை கைப்பற்றி தற்கொலைக்கு உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க