• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அரசு சம்பளம்

September 16, 2017 தண்டோரா குழு

தெலுங்கானா கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இனி அரசு சம்பளம் வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.இத்திட்டம் தூப் தீப்-நைவேத்தியம் என்னும் திட்டத்தின் கீழ்,அறிவிக்கப்படவுள்ளதாகவும்,வரும் நவம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள 1805 கோவில்களுக்கு, தூப் தீப்-நைவேத்தியம் என்னும் திட்டம் மூலம் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ 2,500, தற்போது ரூ6,000மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 3,000 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 4,805 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் பயனைடைய உள்ளதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க