• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரபல சாக்லேட் நிறுவனம் தயாரித்த சாக்லேட்டில் புழுக்கள்

September 15, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் பிரபல சாக்லேட் நிறுவனம் தயாரித்த சாக்லேட்டில் புழுக்கள் இருப்பதாக பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் வைல் என்பவர் பிரபல சாக்லேட் நிறுவனம் தயாரிக்கும் சாக்லேட் பெட்டியை வாங்கினார். வீட்டிற்கு திரும்பிய அவர், சாக்லேட் பெட்டியில் இருந்த சாக்லேட்டை திறந்தபோது, அதில் புழுக்கள் இருப்பதைக் கண்டார். இதைத்தொடர்ந்து அவர் பிரித்த அனைத்து சாக்லேட்டிளும் புழுக்கள் இருப்பத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த சாக்லேட் குறித்து காணொளி ஒன்று எடுத்து, அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், அந்த நிறுவனத்தின் சாக்லேட்டை யாரும் வாங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளத்தில் அந்த சாக்லேட் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ரேச்சலை தொடர்புக்கொண்டு, “எங்கள் நிறுவனம் தயார் செய்யும் சாக்லேட் சுகாதாரம் ஆனது தான். சரியான முறையில் சாக்லேட்டை பாதுகாக்கப்படாததே அதற்கு முக்கிய காரணம். இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க