• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் நாட்டின் வான்வழியாக ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

September 15, 2017 தண்டோரா குழு

ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா இரண்டாவது முறையாக சோதனையை செய்தது.

சமீபத்தில் வடகொரியா ஹைட்ரோகேன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்த சோதனைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதைத்தொடர்ந்து, ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, வட கொரியாவுக்கு பொருளாதார தடை விதித்தது.

இதற்கு பிறகு,வட கொரியா தனது ஏவுகணை சோதனையை கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை கைவிடாமல் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று(செப்டம்பர் 15) மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

இன்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணை வட கொரியாவின் மேற்கு கடற்பகுயிலிருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, ஜப்பான் நாட்டின் வான்வெளி வழியாக சென்று, எரிமிடோ தீபகற்பகத்தில் கிழக்கு பகுதியில் விழுந்தது.இதில் அங்கிருந்த துறைமுகத்திலிருந்த கப்பல்களுக்கோ அல்லது விமான நிலையங்களிலிருந்த விமானங்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க