• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னம் யாருக்கு- அக்., 31க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

September 15, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவில் உ.பி யில் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியின் பிளவு ஏற்பட்ட போது பெரும்பான்மை ஆதரவு உள்ளவருக்கே கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.இதே போல் ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெற்ற அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று(செப் 15) விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரட்டை இலை யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க