• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘செப்.,20-ம் தேதி வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது’ – சென்னை உயர்நீதிமன்றம்

September 14, 2017 தண்டோரா குழு

செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது, விசாரணையின் போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் “ தி.மு.க.,வை சேர்ந்த 21 மற்றும் அதிமுக எம்.எல்.ஏ,.க்கள் 19 பேர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது.தகுதி நீக்கம் செய்துவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க முயற்சிகள் நடக்கிறது,” என்றார்.

இதனையடுத்து செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க