• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கை வாக்கெடுப்பு – திமுக மனு நாளை விசாரணை

September 13, 2017 தண்டோரா குழு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை ஆதரவளித்து வந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது ஆகையால் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்தார்.

எனினும், பல முறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க