• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் அப் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக பிரையன் ஆக்டன் அறிவித்துள்ளார்

September 13, 2017 தண்டோரா குழு

பிரபல வாட்ஸ் அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன், அந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2௦௦9ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை, ஜான் கூம் என்பவருடன் சேர்ந்த பிரையன் ஆக்டன் தொடங்கினார். ஜன் கூம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், பிரையன் ஆக்டன் அதன் துணை அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், தான் சொந்தமாக வேறு ஒரு நிறுவனத்தை தொடங்க இருப்பதால், வாட்ஸ் அப் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக பிரையன் ஆக்டன் சமீபத்தில் தனது பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“லாப நோக்கமற்ற தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நான் எண்ணியிருந்த கனவை நனவாக்கும் நேரம் இது. என்னுடைய புதிய முயற்சிகளை குறித்து, விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்” என்று தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டார்.

மேலும் படிக்க