• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவராகிறார் ஹலிமா யாக்கோப்

September 13, 2017 தண்டோரா குழு

சிங்கப்பூர் நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலில் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன்னாள் பேச்சாளர் ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் தற்போது குடியரசு தலைவராக இருக்கும் அதிபர் டோனி டான் பதவிகாலம்
நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்தாண்டு நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில்,சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக பாராளுமன்றத்தின் முன்னாள் பேச்சாளர் ஹலிமா யாகோப் அறிவித்திருந்தார்.

இதேபோல்,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அவர்களுடைய மனுவை தேர்தல் அதிகாரிகள் பரிசீலினை செய்த பின், அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹலிமா யாக்கோப் அந்த பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.மேலும் சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவர் என்னும் பெருமையை ஹலிமா யாகோப் பெற்றார்.

மேலும் படிக்க