• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 537 வீடுகள்அகற்றப்பட்டன

September 12, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திலுள்ள,ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்குகரை பகுதிகளில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.

இப்பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.இதில் அணைமேடு ஒன்றில் 71 வீடுகள் அணைமேடு இரண்டில்– 276 வீடுகள், துர்கா காலனி 7 வீடுகள்,அண்ணா காலனி 56 வீடுகள், முத்து காலனி 64 வீடுகள், சேரன் நகர் 53 வீடுகள் அகற்றப்பட்டன.

மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ளலூர் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்க உத்தரவு வழங்கி ஒருமாத கால அவகாசம் கொடுத்தும், காலி செய்யாததால் இன்று அனைத்து வீடுகளும் அகற்றப்பட்டன.

மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் அணைமேடு பகுதியில் இருந்து வெள்ளலூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் மூலம் மழை நீர் தடையின்றி சென்று ஏரி நிரம்புவதற்கு வழிவகை ஏற்படும்.

மேலும், அணைமேடு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவும், முத்துகாலனி சேரன் நகர்,அண்ணா காலனி, உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் 3 ஏக்கர் பரப்பளவு,ஆகமொத்தம் 7 ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த நடவடிக்கையின் மூலம் 18 இடங்களில் மொத்தம் 1415 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படவுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் இணைப்பு மற்றும் சுற்றுப்புற அபிவிருத்தி பணியின் முதற்கட்டபணி மாநகராட்சி சார்பாக களத்தில் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க