• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹிட்லரின் பொருட்கள் ஏலம்

September 12, 2017 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரி ஹிட்லருடைய பாக்சர் கால்சட்டை ஏலம் விடப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது, தனது சர்வதிக்கார ஆட்சியால் உலகத்தையே பயம் அடைய செய்தார் ஹிட்லர்.தற்போது அவருடைய பாக்சர் கால்சட்டை அமெரிக்காவில் ஏலம் விடப்படுகிறது.
இந்த கால்சட்டை சுமார் 5௦௦௦ அமெரிக்க டாலர் வரை ஏலம் போகும் என்று கருதப்படுகிறது.

கடந்த 1938ம் ஆண்டு, ஆஸ்திரியா நாட்டின் பார்க் ஹோட்டல் கிராஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அவருடைய கால்சட்டை ஒன்று அங்கேயே விடப்பட்டது.அந்த கால்சட்டையில் AH என்ற அடையாளமும் இருந்தது என்று அமெரிக்கவிலுள்ள ஏல நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்,‘மெய்ன் காம்ப்’ என்னும் ஹிட்லரின் சுயசரிதத்தை புத்தகம், அவருடைய வெள்ளை உடை, ஜெர்மனி நாட்டின் பவேரியா என்னும் நகரிலுள்ள ஹிட்லரின் வீட்டிலிருந்த உலகப்படம் ஆகியவை அந்த ஏலத்தில் இடம்பெறுகிறது.

மேலும் படிக்க