• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டொமினோஸ் பிட்சா மசாலா பேக்கில் பூச்சிகள்!

September 12, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் டொமினோஸ் பிட்சா உணவகத்தில் பிட்சாவுடன் தரப்படும் மசாலா பேக்கில் பூச்சிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுதில்லியை சேர்ந்த ராகுல் அரோரா என்பவர் டொமினோஸ் பிட்சா உணவகத்திலிருந்து ஆன்லைன் மூலம் பிட்சா ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு, அவர் ஆர்டர் செய்த பிட்சா அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிட்சாவோடு தரப்படும் மசாலா பேக்கில் பூச்சிகள் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இன்னிலையில், தான் பார்த்தது பிட்சாவை மசாலா மூலிகைகளாக இருக்கலாம் என்று நினைத்தார். அந்த மசாலா பேக்கை தட்டிய போது, அதிலிருந்து பூச்சிகள் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் புதுதில்லியிருந்த நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு தகவல் தந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்த அவர்கள் ராகுலின் வீட்டிற்கு வந்து, பூச்சிகள் இருந்த பேக்கை சோதனைக்கு எடுத்து சென்றனர்.

இதன் பிறகு, ராகுலிடம் டொமினோஸ் பிட்சா உணவகத்தின் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டொமினோஸ் பிட்சா உணவக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மேலும் படிக்க