• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காயத்துடன் நாடு திரும்பினார் போப் ஃபிரான்ஸிஸ்

September 12, 2017 தண்டோரா குழு

கொலம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோமன் கத்தோலிக்க தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்,காயத்துடன் நாடு திரும்பினார்.

ரோமன் கத்தோலிக்க தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ், கொலம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் தனது வாகனத்தில் ஏறும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தால் வாகனத்தில் மோதி காயம் அடைந்துள்ளார்.

இதனால் அவருடைய கன்னம், கண்கள் மற்றும் புருவம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த ரத்தம், அவர் அணிந்திருந்த வெள்ளை உடையில் விழுந்தது.அதை கண்ட அவருடைய ஊழியர்கள் அவருக்கு உடனே ஐஸ் கட்டி வைத்து முதல் உதவி தந்தனர்.

பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு, அந்நாட்டின் கடலோர பகுதியில் திரண்டிருந்த சுமார் 5௦௦,௦௦௦ மக்களுடன் உரையாடினார். அதற்கு பின்னர், அவர் ரோம் திரும்பி சென்றார். அவரை கொலம்பிய நாட்டின் மக்கள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க