• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம்! – டிடிவி தினகரன்

September 11, 2017 தண்டோரா குழு

முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம் என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.அதிமுக துணைப் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

துரோகம், சுயநல சிந்தனை உடையவர்கள் மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். முடியவில்லை என்றால், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் தயாராகிவிட்டோம். இது அம்மாவின் ஆட்சியல்ல.

எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் துரோக ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல.சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஏட்டாக டி புரமோட் ஆனது போல, மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் துணை முதல்வராகிவிட்டார். பதவி இல்லையென்றால், ஓபிஎஸ்க்கு தூக்கம் வராது.முதல்வரை மாற்றவில்லை என்றால் இந்த ஆட்சியை கிள்ளி எறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க