• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களை பாதிக்ககூடிய சட்டங்களை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் – இரோம் ஷர்மிளா

September 11, 2017 தண்டோரா குழு

மக்களை பாதிக்ககூடிய சட்டங்களை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்என இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

மதுரையில் உள்ள சோகோ என்ற அறக்கட்டளை சார்பில் ஓவ்வொரு வருடம் மறைந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடம் இந்தியாவின் இரும்பு பெண் என்றழைக்கப்படும் இரோம் ஷர்மிளாவிற்கு அவ்விருது வழங்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பேசிய அவர்,

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்ககோரி 16 ஆண்டுகள் அறப்போர் நடத்தியமைக்கு தற்போது எனக்கு விருது வழங்குவது மகிழ்ச்சி .இந்த விருது எனக்கு மட்டும் இல்லை சமூக அமைப்புகள் , போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைருக்கும் சமர்ப்பணம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஒரு கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.கரூத்து சுதந்திரத்திற்காக போராட கூடிய அனைவருமே கௌரி லங்கேஷ் தான்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் சம உரிமை வழங்கியுள்ளது.ஆனால் அடக்கு முறை தான் அதிகம் உள்ளது.நீட் தேர்வு தோல்வியால் அனிதா உயிரிழந்தது வருந்ததக்கது. கல்வி மாநில கொள்கையில் பிரச்சனை. மக்களை பாதிக்ககூடிய சட்டங்களை அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க