• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஜிஎஸ்டி சகோதரிகள்

September 11, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி திட்டத்தால் ஈர்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்த கஞ்சன் படேல் என்பவருக்கு சமீபத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி(GST) என்று பெயர் சூட்டியுள்ளார். அதாவது ஜிஎஸ்டி என்னும் சொல்லின் முதல் எழுத்தை கொண்டு கவாரி,சஞ்சி மற்றும் தராவி(Gawari, Sanchi and Tarawi) என்று பெயர் சூட்டியுள்ளார்.

“இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த ஒரு நாடு ஒரு வரி என்னும் ஜிஎஸ்டி திட்டம் எங்களை மிகவும் கவர்ந்தது. அதனால், நானும் என் கணவரும் எங்களுடைய மகள்களுக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட முடிவு செய்தோம்” என்று கஞ்சன் படேல் தெரிவித்தார்.

பிரதமரின் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி என்று பெயர் சூட்டியது இது முதல் முறை அல்ல.

ஜிஎஸ்டி கொண்டு வரவிருந்த நாளுக்கு முதல் நாள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயரிட்டனர். அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரு குடும்பத்தினர் ஜிஎஸ்டி அமலுக்கு கொண்டு வந்த நாளில், பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயர் சூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க