• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை கோபுர தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவுதினம்

September 11, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் 16வது நினைவு நாள் இன்று(செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் கடத்தப்பட்ட விமானம் மூலம் 2௦௦1ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்11 மற்றும் யுனைடட் ஏர்லைன்ஸ்விமானம்ட் 175 என்னும் விமானம் மூலம் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களை தாக்கினர். இந்த தாக்குதலில் இரண்டு கோபுரங்களும் தரைமட்டம் ஆனது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்,பென்ஸில்வேனியா மற்றும் பெண்ட்டகன் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாகுதலில் சுமார் 3,௦௦௦க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க நாட்டில் நடந்த இந்த தீவிரவாத தாக்குதல் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தின் 16வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமெரிக்காவில் சிறப்பு பிராத்தனைகளும்,இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க