• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையின் நடுவே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

September 11, 2017 தண்டோரா குழு

மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை இடையே மரம் விழுந்து போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக மரம் சாலையின் நடுவே விழுந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட பணியாட்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

மேலும், குன்னூரிலிருந்து தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், இன்று மாலைக்குள் முழு அளவிலான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க