• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு!

September 11, 2017 தண்டோரா குழு

அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ சந்தித்தார். அப்போது அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்க வலியுறுத்தும் கடிதத்தை சபாநாயகரிடம் வெற்றிவேல் அளித்தார்.

முதல்வரை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதனால் தன்னை ஆலோசிக்காமல் ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலுக்கு, அ.தி.மு.க., வின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் செப்.,18 ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி சபாநாயகர் தனபாலிடம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் புகார் மனு அளித்துள்ளார்.மேலும் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படும் அவரை நீக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க