• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வுக்கு தடை கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

September 8, 2017 தண்டோரா குழு

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த மன விரக்தியில், அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க கோரி, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு,வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை நீதிமன்றத்திலிருந்து பேரணியாக புறபட்ட அவர்கள் கோவை ரயில்நிலையத்தில் 3 வது பிளாட் பார்மில் அழப்பி – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். அதன் பின்னர் ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் 57 பேரை கைது செய்தனர்.

“கல்வியை பொது பட்டியலில் இருந்து விடுவித்து , மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்,” என கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே எம் தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறினார்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற மறியல் போராட்டம் காரணமாக ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க