• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த பெண் உயிர் பெற்று மீண்டும் இறந்தார்

September 7, 2017 தண்டோரா குழு

கேரளாவில் இறந்துவிட்ட பெண் உயிரோடு இருப்பதை அறிந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னம்(51) உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடைய உறவினர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மஞ்சள்காமாலை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் நீண்ட நாள் உயிர்வாழ போவதில்லை என்று அறிந்த மருத்துவர்கள், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு அவருடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரத்தினத்தின் உறவினர்கள் அவரை நேற்று(செப்டம்பர் 6) ஆம்புலன்ஸ் மூலம், வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவரின் மூச்சு நின்று இருப்பதையும் உடலில் எந்த அசைவும் இல்லை என்பதை கவனித்த உறவினர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவருக்கு கடைசி சடங்குகளை செய்ய, அவருடைய உடலை எடுக்க வந்த உறவினர்கள், அவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மருத்துவர்களுக்கு தகவல் தந்தனர். அங்கு வந்த அவர்கள், ரத்தினத்தை பரிசோதித்து விட்டு, அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து,அவரை அவசர பிரிவில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை அவர் இறந்துவிட்டார்.

மேலும் படிக்க