• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் – மு.க ஸ்டாலின்

September 5, 2017 தண்டோரா குழு

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் உரிமை குழு நோட்டீஸ்தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது,

“உரிமை மீறல் நோட்டீக்கு பதில் அளிக்க 15நாள் அவகாசம் கேட்டுள்ளோம். சட்ட நிபுணர்களை ஆலோசித்து தான் இதுக்குறித்து பதிலளிக்க முடியும்.

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உரிமை இல்லை. இன்றைக்கு நடந்த அவரது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதனால் தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும். இனியும் ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க