• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தஜிகிஸ்தான் நாட்டில் பர்தா அணிய தடை

September 2, 2017 தண்டோரா குழு

தஜிகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான் நாட்டில் எராளமான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.தஜிகிஸ்தான் நாட்டில் வாழும் முஸ்லிம் பெண்கள் பர்தா உடைக்கு பதிலாக அந்நாட்டின் நாட்டின் பரம்பரை மற்றும் கலாசார ஆடைகளை அணிந்து, துப்பட்டாவால் தங்கள் தலையை மட்டும் மூடிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுக்குறித்து, தஜிகிஸ்தான் நாட்டின் கலாச்சார துறை அமைச்சர் கூறுகையில்,

“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பல நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் அணியும் அந்த உடைக்குள் என்ன வைத்திருக்கின்றனரோ? என்று முஸ்லிம் அல்லாத மக்கள் பயத்துடன் அவர்களை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் முஸ்லிம் பெண்கள் பர்தா உடையை அணிய வேண்டாம்” என்று கூறினார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் தஜிகிஸ்தான் நாடு அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் பர்தா அணிய தடை விதித்தது. பர்தாவிற்க்கு பதில் துப்பட்டாவால் தங்கள் தலைகளை மூடிக்கொள்ளலாம் என்றும் அந்த புதிய உத்தரவை கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாடு அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க