• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது -ரஞ்சித்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது என்று இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரில் வைக்கப்பட்டுள்ள மாணவி அனிதாவின் உடலுக்கு இயக்குநர் ரஞ்சித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அனிதாவின் மருத்துவர் கனவு நீட் தேர்வால் நசுக்கப்பட்டு விட்டது.ஏழை மாணவர்களின் கல்வி கனவை பறிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. இது யாருக்கான அரசு, சமூக நீதிக்கு எதிரான அரசு தான் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். தமிழக அரசு ‘நீட்’ விவகாரத்தல் நேர்மையாக செயல்படவில்லை.நீட் நுழைவுத் தேர்வவை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்,” என்றார்.

மேலும் படிக்க