• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி மையம் தொடங்கப்படும் – தமிழக அரசு

September 2, 2017 தண்டோரா குழு

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையம் சென்னையில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மையத்தை பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு தொடங்க என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு 1 கோடியே 53 லட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.இப்பயிற்சி மையத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க