• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் தவறான பாதையில் சென்றதால் ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம்

September 1, 2017 தண்டோரா குழு

உ.பியில் ரயிலை தவறான பாதையில் கொடியசைத்து திருப்பிவிட்டதிற்காக பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில், பிப்னா ரயில்நிலையத்திலிருந்து காசிபூர் நகருக்கு செல்ல வேண்டிய சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் மாவ் நகருக்கு செல்லும் பாதையில் சென்றுவிட்டது.அதன் பின்னர் ரயில் தவறான பாதையில் செல்வதை உணர்ந்த ரயில் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிப்னா ரயில்நிலைய அதிகாரிக்கு தகவல் தந்தார்.

தவறை அறிந்த அவர், மீண்டும் அந்த ரயில் பிப்னா ரயில்நிலையத்திற்கு திரும்பி வர செய்தார். சப்ரா வாரணாசி இண்டர்சிட்டி ரயில் தவறான பாதையில் சென்றதற்காக, பிப்னா ரயில்நிலைய அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

சுமார் 25 நிமிடம் தாமதத்திற்கு பிறகு, சரியான பாதையில் ரயில் சென்றது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க