• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்த காமெடி நடிகை மதுமிதா !

August 31, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை மதுமிதா தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையில் அவரின் கையை பிடித்து கடித்ததால் அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல், மற்றும் உதயநிதி, சந்தானம் ஆகியோர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தவர் காமெடி நடிகை மதுமிதா. இவர் தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்துக்கு வீட்டில் உஷா என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில், உஷா கோயம்பேட்டில் உள்ள காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, எதிர்பாராத விதமாக காமெடி நடிகை மதுமிதா அந்த பெண்ணின் கையை பிடித்து கடித்து உள்ளார்.உடனே உஷா வலி தாங்க முடியாமல் நடிகையை கீழே தள்ளியுள்ளார், இதனையடுத்து இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க